இரண்டு பெண்களுக்கு கொவிட் தொற்று

பட்டிப்பளை சுகாதர வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இரண்டு பெண்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார் 

மகிழடித்தீவு பட்டிப்பளைப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.

 இப் பெண்கள் மட்டக்களப்பு ஆரையம்பதிப் பகுதியில் தனியார் ஆடைத்தொழிச்சாலையில் வேலை செய்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இவர்களது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Related posts