இராணுவ வண்டி புகையிரதத்துடன் மோதி விபத்து: 04 இராணுவ வீரர்கள் பலி

கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 04 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 03 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். 
இராணுவ கவச வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து கூறினார். 
கொழும்பில் இருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் குறித்த இராணுவ வாகனம் மோதியுள்ளது. 
கிளிநொச்சி 55ம் சந்திப் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினூடாக இராணுவ வண்டி செல்ல முற்பட்ட வேளை விபத்து இடம்பெற்றுள்ளது. 
விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts