இரு வயது குழந்தையின் தாய் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு-கொக்கட்டிச்சோலையில் சோகம்கணவர் சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தைச்சோந்த இரு வயதுடைய குழந்தையின் தாயார் தனது வீட்டிலிருந்து இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
காளி கோயில் வீதி மகிழடித்தீவு (தெற்கு) பிரதேசத்தைச்சேர்ந்த சிவலிங்கம் கஜேந்தினி வயது (21) என்பவரே இன்று அதிகாலை தனது வீட்டு அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவராவார்.
 
நீண்டகாலமாக கணவன் மனைவிக்கிடையில் குடும்பத்தகறாறு ஏற்பட்டு வந்ததாகவும் கணவர் சம்பவ தினத்தன்று வெளியில் சென்று வீடு திரும்பிய நிலையில் அவரின் சிறு குழந்தையை தனது சகோதரியின் வீட்டில் விட்டுச்சென்று  இன்று காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திற்குச்சென்று  குடும்பத்தகராறு காரணத்தினால் தனது மனைவியினை தானே கொலை செய்து விட்டு வந்துள்ளதாக பொலிஸாரிடம் முறையிட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த பெண்ணினை சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேதத்தினை பிரேத பிரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts