இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்கக்கடலில் தற்போது ஒரு தாழமுக்கம்

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்கக்கடலில் தற்போது ஒரு தாழமுக்கம் உருவாகியுள்ளது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuththu Pratheeparajah) தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் 20.12.2021 வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது எனவும், குறிப்பாக யாழ். மாவட்டத்திற்கு கன மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts