இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவம் சிலை திறந்து வைப்பு

 

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவம் சிலை இன்று 15 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்மந்தன் கலந்து கொண்டதுடன் இதன் போது தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அக்கட்சியின் செயலாளர் ஆர். துரைராஜாசிங்கம் என த.அ. கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவம் சிலையினை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திரைநீக்கம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts