நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பது தமிழீழ விடுதலைப்புலிகளும் மக்களுமாகவே இருந்தது

நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பது தமிழீழ விடுதலைப்புலிகளும் மக்களுமாகவே இருந்தது என்கின்றார் ஜ.போ.கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட ஊடக பேச்சாளர் பீ. கோனேஸ்
 
வெல்லாவெளியில் அமைந்துள்ள கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது கலந்து கொண்ட போது மாவீரர் தின அனுஸ்டிப்புகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்
கடந்த காலங்களில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளை கட்டையர்களும் நெட்டையர்களுமே நடாத்தியதை காணக்கூடியதாக இருந்தது ஆனால் எமது மண்ணிற்காகவும் எமது சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என போராடிய நமது மாவீரர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னின்று நடாத்துவது பொதுவாக ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கே உரியது.
அந்தவகையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மாவீரர் தினம் அன்னைபூபதி அம்மாவின் நினைவேந்தல் மற்றும் மாலதி அக்காவின் நினைவு நாள் நிகழ்வுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் பொது மக்களுக்குமே ஆகும் ஆனால் தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஏற்பாடுகள் செய்வது ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கே உண்டு எனவே எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் எமது கட்சியினரிடம்
தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் செய்ய முன்வரவேண்டும்
அத்துடன் எமது கட்சியானது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதுனால் ஒரு பலம் வாய்ந்த செயற்பாடுகளாக அமையும் ஆகையினால் வடக்கில் உள்ளவர்கள் எமது தலைமைக்காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டிம் கிழக்கில் நினைவு நிகழ்வுகளை எமது மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர்  என். நகுலேஸ் அவர்களிடம் தொடர்பு கொண்டு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். என அவர் கருத்தும் தெரிவித்திருந்தமை குறிப்படத்தக்கது.

Related posts