உடல்நிலை பாதிப்பு: அமைச்சர் விஜயகலா வைத்தியசாலையில் அனுமதி!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

யாழில். உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள இராஜாங்க அமைச்சர் (செவ்வாய்க்கிழமை) திடீரென உடல் நல பாதிப்புக்கு உள்ளானர். இதனையடுத்து அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற, இராஜாங்க அமைச்சர் இன்று மதியம் வீடு திரும்பியதுடன், தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ‘விடுதலை புலிகள் மீள உருவாக வேண்டும்’ என உரையாற்றி இருந்தமை நாடு முழுவது சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது.

இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் குறித்த விடயத்தினால் கடும் குழப்பம் ஏற்பட்டதையடுத்து நாடாளுமன்றம் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் குறித்த சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக உரையாற்றினார் எனவும், இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts