உதயரூபன் மீதான தாக்குதலைக் கண்டித்து நாளை கிழக்கில் பல இடங்களில் கவனயீர்ப்புப்போராட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொ. உதயரூபன் அவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கவனயீர்ப்புப்போராட்டம் நாளை 24 ஆம் திகதி மட்டக்களப்பு  மைக்கல்ஸ் கல்லூரிக்குமுன்பாக இடம்பெற இருக்கின்றது.

நாளை மதியம் 1.15 மணிக்கு இடம்பெறவுள்ள இவ் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்து ஆசிரியர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேவேளை இச்சம்பவத்தினைக் கண்டித்து நாளை திருகோணமலையில் கிழக்கு மாகாணக் கல்விஅமைச்சி;க்கு முன்பாகவும் ஆளுநர் அலுவலகத்திற்குமுன்பாகவும் மற்றும் கல்முனையிலும் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts