உறுகாம நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவராக மீண்டும் புவிநாயகம்…



உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திற்குரிய திட்ட முகாமைத்தவக் குழு தலைவர் தொடர்பிலான தெரிவுக் கூட்டம் இன்றைய தினம் செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் காரியாலத்தில் திட்ட முகாமையாளர் ஜெயப்பிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் உறுகாமத் திட்டத்தில் உள்ள பதினெட்டு கண்டங்களுக்குமுரிய திட்ட முகாமைத்துவக் குழுவுக்கான புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றது. இதன் போது செங்கலடியைச் சேர்ந்த மு.மகேந்திரராஜா மற்றும் முன்னாள் தலைவரான வந்தாறுமூலையைச் சேர்ந்த க.புவிநாயகம் ஆகியோர் தலைவர் தெரிவிற்காகப் போட்டியிட்டனர்.

பதினெட்டு கண்டங்களிலும் தலைவர், செயலாளர் ஆகியோரே இந்தத் திட்ட முகாமைத்துவக் குழுவிற்கான தலைவரைத் தெரிவு செய்யும் முகமாக வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும் அந்த வகையில் முப்பதாறு வாக்குகளில் 21 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வந்தாறுமூலையைச் சேர்ந்த க.புவிநாயகம் உறுகாமத் திட்ட முகாமைத்துவக் குழுவின் புதிய தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts