உள்ளுராட்சி சான்றிதழ் பயிற்சிநெறியில் தவிசாளர் ஜெயசிறில் சிறப்புச்சித்தி.

இலங்கை பொதுநிருவாக உள்நாட்டு மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சின் இலங்கை உள்ளுராட்சி நிறுவனம் நடாத்திய, உள்ளுராட்சி  சான்றிதழ் பயிற்சிநெறியை காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சிறப்புச்சித்தி பெற்று பூர்த்திசெய்துள்ளார்.
 
இந்த சான்றிதழ் பாடநெறி கொழும்பில் கடந்த 2019பெப்பருவரி மாதம் இடம்பெற்றது. 
 
இதில் கலந்துகொண்ட உள்ளுராட்சி மன்றத்தலைவர்களில் பலர் சித்திபெற்றுள்ளனர்.
 
நேற்று, அப்பரீட்சையின்பெறுபேறு வெளியிடப்பட்டது.

இலங்கை பொதுநிருவாக உள்ளுராட்சி மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாரும்  நிறுவனத்தின் தலைவருமான  ஜே.ஜே.ரத்னசிறி ஒப்பமிட்டு சான்றிதழை வழங்கியுள்ளார்.
 
 

Related posts