ஊடகவியலாளர்களின் இரண்டாந் தொகுதியினருக்கு நிவாரண பொதிகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களின் இரண்டாந் தொகுதியினருக்கு நிவாரண பொதிகள் வழங்க அரச ஊடகப்பிரிவு நடவடிக்கை
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் களத்தில் நின்று ஊடகப்பணிபுரிந்த ஊடகவியலாளர்களில் இரண்டாந் தொகுதியினருக்கு நிவாரணப் பொதிகளை வழங்க அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் மாவட்ட அரச ஊடகப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
இதற்கமைவாக அனைத்துலக மருத்துவநல அமைப்பின் அணுசரணையில் இந்த இரண்டாந் தொகுதி நிவாரணப் பொதிகளை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர். திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் இன்று (21) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.
 
இந்நிகழ்வில் அனைத்துலக மருத்துவநல அமைப்பின் பிரதிநிதி எஸ். கோகுலன், மாவட்ட ஊடக அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் உட்பட பல ஊடகவியலாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
 

Related posts