சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்களின் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் உறுதிப்பிரமாண நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் உறுதிப்பிரமாண நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் இன்று காலை (01) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர். கலந்துகொண்டனர்.

Related posts