கிழக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பு – ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர்.

1 ஆம்திகதி  புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யகம்பத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
 
இந்தச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. மட்டக்களப்பு மேற்கு வலயம் எதிர்நோக்கும் ஆசிரியர்ப் பற்றாக்குறை , அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறும் சட்ட விரோத மண் அகழ்வு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் மற்றும் ஆளணியரின் பற்றாக்குறை , மேய்ச்சல் தரைப் பிரச்சினைகள்  ,யானை வேலி தொடர்பான பிரச்சினைகள், திணைக்களங்கள் மற்றும் சுகாதார சேவை நிலையங்களில் காணப்படும் சமநிலையற்ற வளப்பகிர்வுகள் ,புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் , பட்டதாரிகளின்  வேலைவாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
 
இக் கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக நடைபெற்றதாகவும் , கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக ஆளுநர் உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்

Related posts