ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட மட்டத்தில் கோவிட்19 தடுப்பூசி வழங்க ஊடகத்துறை அமைச்சும் தகவல் திணைக்களமும் நடவடிக்கை

ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட மட்டத்தில் கோவிட்19 தடுப்பூசி வழங்க ஊடகத்துறை அமைச்சும் தகவல் திணைக்களமும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடகமுடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதை தெரிவித்தார்.
 
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்திரிகையாளர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்கனவே ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் கடந்த சில தினங்களில் வழங்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
கொவிட்19 வைரஸால் ஏற்கனவே ஏராளமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தனியான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தை நிறுவுவது தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து தனியான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்

Related posts