எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த – சபாநாயகர் தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த தீர்மானத்தை சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் நிலைப்பாட்டில் அதேநிலையில் தொடர்ந்து நிற்கப்போவதாக கட்சித் தலைவர்களிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நடைபெற்ற கட்சிகளின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

அதன்படி எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்களை துரிதமாக நடத்தி, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் பாராளுமன்றக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts