எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோலுடன் மண்ணெண்னை கலப்பு

வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோலுடன் மண்ணெண்னை கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக மோட்டார் வாகனங்களுக்கு அன்றைய தினம் பெறோல் நிரப்பியவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த சம்பவம் நேற்று மாலை (29) இடம்பெற்றுள்ளது.

 
சம்பவ தினத்தன்று அதிகளவான மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் நிரப்பிவிட்டு செல்லும் போது வீதியில் மோட்டார் வாகனத்தை செலுத்தமுடியாமல் போனதாகவும் இதனால் மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்துவிட்டதாகவும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.பின்னர் பிரதேச வாசிகள் வெற்றுக்கலன்களில் பெற்றோலை பெற்று பார்த்தவேளையில் அதில் மண்ணெண்னை கலப்பு இடம்பெற்றுள்ளதை கண்டுபிடிக்கப்பட்;டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related posts