எரிபொருள் நிலையங்கள், தம்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 40 எரிபொருள் நிலையங்கள், தம்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 40 எரிபொருள் நிலையங்களின் விற்பனை இடைநிறுத்த உத்தரவை நீக்குவது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.எவ்வாறாயினும், சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக அந்த 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, எரிபொருளை விற்பனை செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூ.ஆர் குறியீட்டு முறைமைக்கு புறம்பாக தொடர்ந்தும் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுவந்ததால், கடந்த 6 ஆம் திகதி முதல் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

Related posts