எரிவாயு ஒழுக்கினால் காரைதீவு உணவகம் ஒன்றில் தீப்பரவல் ! ஒருவருக்கு காயம்

காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சமையல் எரிவாயு ஒழுக்கின் காரணமாக இன்று நண்பகல் 12:30மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்தது.

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் ஒருவர் எரி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related posts