கல்வியமைச்சின் செயலாளர் அல்-மனாருக்கு விஜயம் !!

நூருல் ஹுதா உமர் 
 

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் செயலாளரின் அழைப்பின் பேரில் நேற்று (01)  அல்மனார் மத்திய கல்லூரிக்கு  கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே. ஜி. முத்து பண்டா அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

 
அச்சந்தர்ப்பத்தில் அதிபர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன் அவசியத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
 
இக் கலந்துரையாடலில் கல்லூரி அதிபர் எம்.ஜே .அப்துல் ஹஸீப்,அபிவிருத்தி சபையின் செயலாளர் எம்.எப்.மர்சூக் ,பழைய மாணவர் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

Related posts