எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவரும் தமிழரசுக்கட்சியின் எருவில் கிளைத் தலைவருமான அ.வசிகரன் அவர்களின் தலைமையில் எருவில் சிக்கனச் சேமிப்பு கடனுதவி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் பாராட்டு விழாவின்போது எருவில் கிராமத்தினைச் சேர்ந்த 34 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இவர்கள் கடந்தவருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்றவர்களும் சாதாரண தரப்பரீட்சையில் உயர் சித்தியைப்பெற்றவர்களும் தமிழ்த்தினப்போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனைபடைத்த மாணவர்களும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர.;
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் மற்றும் கண்ணகியம்பாள் ஆலய பரிபால சபை தலைவர் மா. சுந்தரலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர் சா.பரமானந்தம் மற்றும் கோயில் போரதீவு அதிபர் சா.பரமானந்தம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள் செயலாளர்கள் ஏனைய ஆலயங்களில் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

 

Related posts