எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதவி வழங்கிவைப்பு

(சா.நடனசபேசன்)

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு தளபாடம் மற்றும் வெண்பலகை என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

எருவிலைச்சேர்ந்த சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது நிதி உதவிமூலம் ஒன்றுகூடல்  மண்டபத்திற்கான மேசை மற்றும் வெண்பலகை என்பன அப்பாடசாலையின் அதிபர் எம் .சபேஸ்குமார் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் அமைப்பானது எருவில் கிராமம் மட்டுமல்லாது ஏனைய பல கிராமங்களுக்கும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts