கௌரவ பிரதமர் பெல்லன்வில ரஜமஹா விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டார்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  (2020.12.11) பெல்லன்வில ரஜமஹா விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
 
வழிபாட்டில் ஈடுபட்ட கௌரவ பிரதமர், பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
 
வணக்கத்திற்குரிய தேரரிடம் நலன் விசாரித்த கௌரவ பிரதமர், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வணக்கத்திற்குரிய தேரருக்கு தெளிவுபடுத்தினார்.
 
நாட்டின் பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் செயல்முறைகளுக்கு பொருத்தமான இறையியல் நடைமுறைகள் குறித்து வணக்கத்திற்குரிய தேரர் இதன்போது கௌரவ பிரதமருக்கு அறிவுறுத்தினார்.

Related posts