ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்திக்கு எதிராக 6 மாலை கோவில் போரதீவுக் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்திக்கு எதிராக 6 மாலை கோவில் போரதீவுக் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் கோவில் போரதீவுக் கிராம மக்களால் அக்கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள், என பலதரப்பட்டோரும் பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டுள்ளனர்.

கோவில் போரதீவுக் கிராமத்தில் பன்நெடுங்காலமாக அமைந்திருக்கின்ற சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தை பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தனது அரசியல் பலத்தைப் பாவித்து தான் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் அக்கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts