ஒரு தொகுதி தைத்த முகக்கவசங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகிய New Arrow எனும் நிறுவனம் (30) மாவட்ட செயலாளர் க. கருணாகரனிடம் ஒரு தொகுதி தைத்த முகக்கவசங்களை வன்னிகோப் அவுஸ்திரேலிய நிதியுதவி மூலமாக இம் முகக்கவசங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டது. 
 
இத் தைத்த முகக்கவசங்களை New Arrow நிறுவனத்தின் இணைப்பாளர் திருமதி. ருத்ராதேவி ரவி இந் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் திருமதி. லதா மோகன் ஆகியோர் மாவட்டச்செயலாளர் க. கருணாகரன் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று பதிவாகிய பகுதிகளுக்கு இம் முகக்கவசங்களை வழங்கிவைக்கும் நோக்குடனும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த உதவும் வகையில் இத் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
 
இவர்கள் பெண்கள் உரிமை பெண்கள் சுய தொழிலில் ஈடுபடுகின்ற திட்டங்களையும் பெண்கள் சார்ந்த அபிவிருத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
 
????????????????????????????????????

Related posts