கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 38ஆம் கிராமம் 6ம் வட்டாரத்தின் பக்கமாகவுள்ள ஆற்ரை அண்டிய காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்புக்காய்ச்சிய உபகரணம் மற்றும் பெரிய அளவிலான வரளில் அடைக்கப்பட்ட கசிப்பு என்பன   15 கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கொரோணா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் நோக்கில் பல கிராமங்களில் பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதி பொதுமக்கள்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,அப்பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் அனைவரினதும் ஒத்துழைப்புடன் இந்த கசிப்பு காய்ச்சும் இரகசிய இடம் கண்டு பிடிக்கப்பட்டது.இந்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகவும் இந்த செயற்பாட்டிற்கு பயன்படுத்திய பொருட்கள் அந்த கிராம அபிவிருத்தி சங்கத்தினரிடம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்

Related posts