கடும் குளிரால் கால்நடைகள் உயிரிழப்பு

நாட்டின் சீரற்ற காலநிலையால் வட-கிழக்கு பகுதிகளில் சுமார் 700 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

உயிரிழந்தமைக்கான காரணம்

இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் தான் காரணமா என்பதை அறிய பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானி குழுவொன்று நேற்று வடக்கு மற்றும் கிழக்கிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts