கதிர்காமத்தில் தேரர் மீது துப்பாக்கிச்சூடு: பிரதான சந்தேகநபர் கைது

கதிர்மாமம் – கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி கொபவக தம்மின்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெபிலியான பிரதேசத்தில் வைத்து அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தங்காலை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது, காயமடைந்த கதிர்காமம் கிரிவேஹெர ரஜமஹா விகாராதிபதி கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts