கதிர்காம பாதயாத்திரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தேநீர் உபசரிப்பு

கதிர்காம பாதயாத்திரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வீரமுனையினைச் சேர்ந்த வைத்தியர் ஏ.லதாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நாவலடிக் காட்டுப்பாதையில் தேநீர் விருந்துபசாரம் மற்றும் மருத்துவமுகாமும் நடாத்தப்பட்டு வருகின்றது

காட்டு வழியாகச் செல்லும் பாதயாத்திரிகளின் நலனைக்கருத்தில்  கொண்டு வைத்தியர் லதாகரன் அவர்களால் இந்த ஒழுங்கு செய்யப்பட்டு இருக்கிறது

இச் சேவையினைச் செய்துகொண்டு இருக்கும் வைத்தியருடன் உதவியாக பாணமையினைச்சேர்ந்த சுபத் ஆரையம்பதியினைச்சேர்ந்த சஞ்சையன் ஆகியோருடன் தமிழ் சிங்கள வைத்தியர்களும் தாமாக இணைந்து கடந்த 4 ஆம் திகதியில் இருந்து இச்சேவையினைப் புரிந்துவருகின்றனர்.

ஆலய உற்சவம்  முடிவடையும் வரைக்கும் இச்சேவை தொடர்ந்து இடம்பெற இருப்பதாக வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்ததுடன்  இச்சேவையினை செய்வதற்கு உதவிய சுகாதார அமைச்சு கிழக்குமாகாண சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியசாலைகளின் நிருவாகம் உட்பட உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Related posts