கரடியனாறு பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை பிரதேசத்தில் விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில், அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (5) இடம்பெற்ற இச்சம்பவத்தில் இச்சம்பவத்தில் செங்கலடி – குமாரவேலியார் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த நாகண்டாப்போடி சங்கரப்பிள்ளை (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கால்நடைகள் பராமரிப்பு மற்றும் விவசாயத்தை மேற்கொள்ளும் இவ்விவசாயி தனது அன்றாட கடமைக்குச் சென்றபோது, காட்டு யானை துரத்திச் சென்று தாக்கியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற கரடியனாறு பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts