கல்முனைப்பிராந்தியத்தில் மேலுமொரு கொரோனாதொற்று

கல்முனைப்பிராந்தியத்தில் நேற்று மேலுமொரு கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டிருக்கிறது. இது இறக்காமப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.அத்துடன் இப்பிராந்தயித்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3ஆகஅதிகரித்துள்ளது என கல்முனைப்பிராநதிய சுகாதாரசேவைபபணிப்பாளர் டாக்ர் குண .சுகுணன் தெரிவித்தார்.
 
இறக்காமம் பிரதேசத்தில் கண்டுபிடிககப்பட்ட அந்த நோயாளி  பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
 
 கடந்த 27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றிய 45 வயது நபர் ஒருவர் அக்கரைப்பற்று வீதியில் உள்ள இறக்காமம் 1 எனும் இடத்தில் தனது வீட்டிற்கு திரும்பியிருந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட PCR மாதிரி பொசிட்டிவ்வாக நேற்று இரவு கிடைத்ததை தொடர்ந்து அவருடைய குடும்ப அங்கத்தவர்களான மனைவி மேலும் நான்கு பிள்ளைகள் உட்பட 5 பேருக்கு பிசிஆர் மாதிரிகள் இன்று எடுக்கப்படுகின்றது. 
 
அத்துடன் கொழும்பிலிருந்து அவருடன் ஒரே பஸ்சில் பயணித்த இன்னொரு நபர் உட்பட அவரின் குடும்பத்தார் இருவருக்கும் சேர்த்து மொத்தமாக இறக்காமம் கிராமப் பகுதியில் இன்று எட்டு மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
 
இந்த மினுவாங்கொடை பேலியகொடை தொற்று சம்பவங்களை தொடர்ந்து கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழான பிரதேசங்களில் இதுவரை மொத்தமாக 13 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்

Related posts