கல்முனை பிரதேச செயலக விவகாரம்! கல்முனைக்கு செல்ல முடியாது திரும்பிய மாவை

மட்டு மற்றும் அம்பாரை பிதேசங்களுக்கு விஜயம்செய்திருந்த த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கல்முனைக்கு செல்ல முடியாது திரும்பியதாக தெரியவருகின்றது.

சேனாதிராஜா நேற்று(11) கட்சி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும்நோக்கில் மட்டக்களப்புக்கும், அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தேர்தல் தொகுதிகளுக்கும் சென்றிருந்தார். அண்மைக் காலமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்கின்ற கருத்து வலுப்பெற்றுள்ள நிலையில், கல்முனை பகுதிக்குள் எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்தை பொது அமைப்புக்களும் இளைஞர் அமைப்புக்களும் எடுத்திருந்தன.

இதன்காரணமாகவே அம்பாரை மாவட்ட கட்சித் தொண்டர்கள் சிலரின் ஆலோசனைக்கேற்ப மாவை கல்முனை செல்வதை தவிர்த்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சேனாதிராஜாவின் வழமையான அம்பாரை விஜயத்தில் முதன்மைபெறுவது கல்முனை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts