கல்லடிப் பாலத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

மட்டக்களப்பு, கல்லடி பால வாவியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகவும் அடையாளம் காண்பதற்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts