கல்லடியில் அமைந்துள்ள நாகா பசுமை தொழில் நிலையத்தின் தொழில் முன்னேற்றத்திற்காக நிதி உதவி

சபேசன்

கிழக்கு மாகாணத்தில் கல்விப்பணி மற்றும் வாழ்வாதார உதவிகளை முன்னெடுத்துவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக  மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள நாகா பசுமை தொழில் நிலையத்தின் பெண்களின்  தொழில் முன்னேற்றத்திற்காக நிதி உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு 2023.02.25 ஆம் திகதி சனிக்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் தாய்ச்சங்கப் பொருளாளர் சமூகசேவகர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் மற்றும் தாய்ச்சங்க நிர்வாக உறுப்பினராகிய குமாரவேல் தர்மபாலன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண செயலாளர் திருமதி ரொமிலா; செங்கமலன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உபதலைவர் கண.வரதராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மூன்று இலட்சம்  நிதி தொழில் பயிற்சி முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts