கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திரு நாளை முன்னிட்டு நாளைய தினம் இலங்கையிலுள்ள அனைத்து தமிழ்மொழிமூலப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினமாக உள்ளபடியால் நாளை ஒரு நாளையும் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது கல்வி அமைச்சு.

ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய நாளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பாகங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts