களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகத் தலைவரினால் 11 இலட்சம் பெறுமதியான காணி ஆலய ஆன்னதான மடம் அமைப்பதற்கு அன்பளிப்பு

திருப்பழுகாமம் மகாவிஸ்ணு ஆலய நிர்வாகசபையின் வேண்டுகோளுக்கிணங்க களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகத் தலைவர் என்.ஆனந்தராசா தனக்கு சொந்தமான சுமார் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணியை  ஆலயத்தின் அன்னதான மடமமைப்பதற்கு  அன்பளிப்பு செய்திருந்தார்.
இந் நிகழ்வின்போது  தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து  காணியின் உறுதிப்பதிரத்தினை ஆலய நிருவாக சபையினரிடம் உத்தியோக பூர்வமாக கையளித்திருந்தனர்.
குறித்த காணியை கையளித்தமை இவர் தலைவராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts