காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் தலத்தில் பலி

வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கச்சேனை பொத்தானை பிரதேசத்தில் குளத்துமடு வாகனேரி பிரதேசத்தைச்சோந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான (59) வயதுடைய சின்னத்தம்பி வேலுப்பிள்ளை என்பவர் காட்டு யானை தாக்கியதில் தலத்தில் பலியான சம்பவம் (4) திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
குறித்த பிரதேசத்திலிருந்து தனது வயலினை பார்வையிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது காட்டு வழியில் இடைமறித்த காட்டு யானை தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
வாழைச்சேனை நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வி.ரமேஸ்சானந்தன் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
அண்மைக்காலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிள பிரதேசங்களில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இரக்காகி அதிகமான பிரதேச வாசிகள் பலியாகிக்கொண்டிருக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இச்சம்பவங்களை குறித்த அதிகாரிகள் தடுத்துநிறுத்தாமல் இருப்பது வேதனையழிப்பதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts