காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள குளுவினமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் ஸ்தலத்திலே பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பலியானார், குளுவினமடு கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரபிள்ளை சின்னத்தம்பி(வயது 78) என உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது.

தமது இல்லத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள பகுதியில், தமது மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது யானை தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts