காத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் 63 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த உயிர்த் ஞாயிறு இடம்பெற்ற குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த பிரதான சூத்திரதாரியான ஸாரான் என பொலிசார் அடையாளம் கண்டு பிடித்ததையடுத்து.

இந்த பிரதேசத்தில் இராணுவத்தினர், பொலிசார், மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் கடந்த ஒரு மாதாக காலத்தில் மௌவிகள், உட்பட 63 பேரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனபொலிசார் தெரிவித்தனர் 

இதேவேளை தொடர்ந்து இந்த பிரதேசங்களில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல்களை நடாத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts