காருடன் முச்சக்கரவண்டி நேர் எதிர் மோதியதில் பாரிய விபத்து!

மட்டக்களப்பு தன்னாமுனையில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வாகன சாரதிகளும் படுகாயம் அடைந்துள்ளனர். 29 மாலை 8:10 மணிவேளையில் நடந்த இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரிவதாவது

மட்டக்களப்பை நோக்கி பயணித்த காருடன் ஏறாவூர் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி எதிர்பாராத விதமாக காருடன் நேருக்கு நேராக மோதியுள்ளது.

விபத்துக்குள்ளாகியவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து குறித்து ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts