காரைதீவில் வர்த்தகர் சங்கம் உருவாக்கப்படும்.உள்ளுராட்சிமன்றங்களின் சம்மேளன முகாமையாளர் பிரதீப் கூறுகிறார்.

இதுவரை காரைதீவில் இல்லாதிருந்த வர்த்தகர் சங்கம் இச்செயலமர்வு மூலமாக அமைக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதேபோல் வடிகான் அமைப்பதற்கான மாஸ்ரர்பிளன் இதுவரை இல்லாதிருந்தது. அதை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
 
வாரஇறுதிச்சந்தையொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களைக்காப்பாற்றுவதற்கான சமுகமுடக்கத்தை வியாபாரத்திற்காக வேண்டாம் எனக்கூறமுடியாது. அதுபோல நடமாடும் வியாபாரிகளையும் தடுக்கமுடியாது.
 
எனினும் பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற வர்த்தகர்கள் நீங்கள். உங்களது வர்த்தகத்தை வளமாக்கவே இன்று கலந்துரையாடியுள்ளோம். அது வெற்றியளிக்கும் என்றார்.
சம்மேளனத்தின் திட்டஅலுவர்களான ஆர்.சதினி மற்றும் சி.அஞ்சனா ஆகியோர் செயமர்வை நெறிப்படுத்தினர்.

Related posts