கிளிநொச்சியில் அதிநவீன ஸ்கேனருடன் நால்வர் கைது

கிளிநொச்சி பகுதியில் நிலத்திற்கடியிலுள்ள பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனரை வைத்திருந்த சந்கேநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை கிளிநொச்சி – சிவபுரம் பரந்தன் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, அதிநவீன ஸ்கேனருடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி, பளை, மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்கேநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts