கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து: இருவர் உயரிழப்பு, அறுவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று(திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி ஐயக்கச்சி பகுதி ஏ9 வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மின்சார சபைக்கு சொந்தமான வாகனத்துடன், கொழும்பு விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கயஸ் வாகனம் ஒன்று மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த 8 பேர், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட ஒருவரும், கிளிநொச்சி கொண்டு செல்லப்பட்ட ஒருவரும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், காயமடைந்த ஆறு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts