கிழக்கில் 8வது மரணம் நாவிதன்வெளியில்.கிழக்கில் 1467தொற்றுக்கள் உறுதி

கிழக்கு மாகாணத்தில் எட்டாவது கொரோனா மரணம் கல்முனைப்பிராந்தியத்திலுள்ள நாவிதன்வெளியில் சம்பவித்துள்ளது.
 
இது கல்முனைப்பிராந்தியத்தில் 6வது மரணம், மாகாணத்தில் 8வது மரணம் ஆகும்.
 
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ,ஒலுவில், சாய்ந்தமருது,  அட்டாளைச்சேனை ,வவுணதீவு ,காத்தான்குடி இறுதியாக ஆயைடிவேம்பிலுமாக மொத்தம்  07 கொரோனா மரணங்கள் சம்பவித்திருந்தன.
 
இந்நிலையில் இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில்  குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப்பிரிவாகஇருந்த நாவிதன்வெளிப்பிரிவில் நேற்று இம்மரணம் இடம்பெற்றுள்ளது.
 
நாவிதன்வெளி மத்தியமுகாமைச்சேர்ந்த ஆணொருவர் அம்பாறை பொது வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தநிலையில் மேலதிக சிகிச்சைக்காக  கண்டி பெரியாஸ்திரியில் அனுமதிக்கப்பட்ட வேளை அங்கு மரணமாயுள்ளார்.
இது கிழக்கின் எட்டாவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளது.
நாவிதன்வெளியில்  தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 14ஆக மாறியுள்ளது.
 
கிழக்கில் 1467தொற்றுக்கள் உறுதி.
 
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம்(7)வியாழக்கிழமை 1467 ஆகியது.
 
கடந்த மார்ச் மாதமிருந்து  பேலியகொட மூலமாக இதுவரை    மட்டக்களப்பு மாவட்டத்தில் 309பேரும் கல்முனை பிராந்தியத்தில் 903பேரும் திருமலை மாவட்டத்தில் 183பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 50பேருமாக 1467பேர்  தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
 
மேலும் வெளிநாடு, மினுவாங்கொட, கந்தக்காடுகொத்தணி, வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
 
 
இத்தரவுகளை  கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
 
கல்முனை பிராந்தியத்தில் 903..
 
கல்முனைப்பிராந்தியத்தில் 903ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை  864பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
அதில் அக்கரைப்பற்று 312 தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 212 பொத்துவில் 77 அட்டாளைச்சேனை 87 சாய்ந்தமருது 54 ஆலையடிவேம்பு 36 இறக்காமம் 24 சம்மாந்துறை 27 கல்முனைவடக்கு 17 திருக்கோவில் 15 நிந்தவுர் 13 காரைதீவு 14 நாவிதன்வெளி 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
 
கல்முனை மாநகரில் 283..
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 283 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது.
 
கல்முனை தெற்கில் 212பேரும் சாய்ந்தமருதில் 54பேரும் கல்முனை வடக்கில் 17பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 09வது நாளாக அமுலில்உள்ளது.
 
மட்டக்களப்பில்309…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை  308ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 125 பேரும் கோறளைப்பற்றில் 68 பேரும் களுவாஞ்சிக்குடியில் 31பேரும் மட்டக்களப்பில் 25பேரும் ஏறாவூரில் 15 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
 
திருமலையில் 183…
திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை   183ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 93பேரும் மூதூரில் 42பேரும் கிண்ணியாவில் 18பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
 
கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 50பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 903பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts