கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிருவாகிகள் தெரிவு

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 33வது வருடாந்தப் பொதுக்கூட்டம் புதன்கிழமை (04) பாசிக்குடாவில் அமைந்துள்ள எலிபன்ட் றொக் றிஸோட்டில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் இரா. இராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம், பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி. கே.ஈ. கருணாகரன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. எ.எஸ்.ஜெயசங்கர் மற்றும் கலை கலாசார பீட பீடாதிபதி மு.ரவி, பதில் பதிவாளர் அ.பகிரதன், நிதியாளர் எம்.எம்.பாரிஸ், தாபனங்கள் பிரிவின் (கல்விசாரா) சிரேஷ்ட உதவிப் பதிவாளர் வி. நவிரதன், மற்றும்  சிரேஷ்ட உதவிப் பதிவாளர், சிரேஷ்ட உள்ளக கணக்காய்வாளர், மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தைச் சேர்ந்த சுமார் 450 கல்விசாரா ஊழியர்கள் பங்கேற்றனர். அதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சங்கத்திற்கான 2018-2019 வருடத்திற்கான புதிய நிருவாகத் தெரிவில் கல்விசாரா ஊழியர் சங்க தலைவராக ஏ. ஜெகராஜ், உப தலைவராக இரா.இராஜசேகரம், செயலாளராக த.சிறிதரன், உபசெயலாளராக மா.அமிர்தலிங்கம், பொருளாளராக ச.ரவீந்திரகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் பீடங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பிரிதிநிதிகளும் அத்துடன் கிழக்கொளி சஞ்சிகைக் குழு, கலை கலாசாரக் குழு, விளையாட்டுக் குழு போன்ற உப-குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts