கிழக்கு பல்கலையில் இரண்டாவது தடவையாக குவிக்கப்பட்ட இராணுவத்தினர்

கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இரண்டாவது தடவையாக இராணுவத்தினர் பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதற்கு முன்னதாக சோதனை நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பதிவாளர் பகிரதன் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிடம் வேண்டிக்கொண்டார்.

பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் விடுதிகளும் சோதனையிடப்பட்டன. கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து மக்கள் பீதி அடைந்து காணப்படுகின்றனர். 

இந்த நிலையில் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts