குடும்பஸ்தர் ஒருவர் ஆலய வளாகத்திலிருந்து சடலமா மீட்பு-அம்பிளாந்துறையில் சம்பவம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சேனை அம்பிளாந்துறை பிரதேசத்தில் ஆலய வளாகத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகப்பன் லோகீதன் (வயது 47) என்பர் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள ஆலத்தில் இரவில் தங்குவதாகவும் வழமை போன்று சம்பவ தினத்தன்று ஆலயத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் ஆலயத்திற்குள் சென்றபோது குறித்த நபர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டதனையடுத்து சம்பவம் பற்றி உறவினர்களுக்கு தெரியப்டுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
மட்டக்ளப்பு  நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts