குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 40ம் கிராமம்,வம்மியடியூற்று பிரதேசத்தைச் சேர்ந்த (55) வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான வடிவேல்-நேசதுரை என்பவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  (25) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது மரணமானவர் நீண்ட நாட்களாக தான் தற்கொலை செய்ய போவதாக கூறிவந்ததாகவும் சம்பவ தினத்தன்று அவரின் மனைவி இல்லாதபோது தனது வீட்டு அறையினுள் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த போது சம்பவத்தை கண்ட அவரின் மனைவி அயலவரின் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்துந்செல்லும் போது உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவுக்கு அமைய வெல்லாவெளி பிரதேச பிரிவுக்குட்பட்ட  திடீர்மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு கட்டளையிட்டார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts