குமுக்கன் காளிஅம்பாளுக்கு வைகாசிப்பொங்கல்.

கிழக்கு மாகாணத்தின் தென் கோடியில் உள்ள குமுக்கன்  காளியம்மனுக்கு நேற்று முதல் முறையாக வைகாசி பொங்கல் திருவிழா சிறப்பாக  நடைபெற்றது.
 
 சித்தர்களின் குரல் சமஸ்தானத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர்ஜி தலைமையிலான குழுவினர் குமுக்கன் காளிகாதேவி ஆலயத்திற்கு சென்று அங்கு   அபிஷேகங்கள் செய்து வேப்பிலை அலங்கரித்து அங்கு பொங்கல் பொங்கி வழிபட்டார்கள் .
 
நாட்டிலே இயல்பு நிலை திரும்ப வேண்டும் மக்கள் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற ரீதியிலே இந்த சிறப்பு வைகாசி பொங்கல் விழா அங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 
 சித்தர்கள் குரல் சமஸ்தானத்தின் காவல் தெய்வமாக விளங்கும் காளிகாம்பாள் விக்ரகசிலை அண்மையில் சித்தர் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ குழுவினரால் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Related posts