குறுகியகாலவிடுமுறை!விடுமுறை காலத்தை எவ்வாறு கழிப்பது? டிஜஜி அறிவுரை.

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் பெப்.25ஆம் திகதி முதல் மார்ச் 14ஆம் திகதிவரை குறுகியகால(17நாட்கள்) விடுமுறை வழங்கப்படவிருக்கிறது.
 
இதுபற்றி கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மாகாணபிரதமசெயலாளர்கள் தொடக்கம் அதிபர்கள் வரை சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.
 
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020க்கான  க.பொ.த சா.தரப்பரீட்சை நடைபெறவிருப்பதே இவ்விடுமுறைக்கான காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த க.பொ.த. சா.தரப்பரீட்சை எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறவிருப்பது தெரிந்ததே.
 
எனவே பரீட்சைக்காக பெப்.25ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் சகல பாடசாலைகளும் மீண்டும் மார்ச் மாதம் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.அது சித்திரைவருடப்பிறப்பு விடுமுறைக்காக மீண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருக்கின்றது.
 
அவ்வாறு மூடப்படும் பாடசாலைகளில்  தமிழ்சிங்களப் பாடசாகைள் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 19ஆம் திகதி திறக்கப்படும் அதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் மே மாதம் 17ஆம் திகதி திறக்கப்படும்  என கல்வியமைச்சு சுற்றுநிருபம்மூலம் அறிவித்துள்ளது.
 
முஸ்லிம்களின் ரமழான் நோன்புக்காக ஏப்ரல் 10ஆம் திகதி முதல் மே 16வரை விடுமுறை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விடுமுறையைகழிப்பது பற்றிய அறிவித்தல் – டிஜஜி.
 
இதேவேளை பாடசாலை  விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாகவும் சிந்தனையுடனும் செயற்படுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதை தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்:
 
இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா வைபவங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடல் போன்ற விடயங்களில் சுகாதாரப் பிரிவினர் வகுத்துள்ள சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படுமாறும் தெரிவித்தார்.
 
அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகின்ற வார இறுதி நீண்ட விடுமுறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் தொடர்பாகவும் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவித்தார்.
 
பிரித்தானியாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

Related posts