குற்றத்தை ஒப்புக்கொண்டவருக்கு 50 ஆயிரம் தண்டம்! யாழ்.நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ் – அரியாலை பகுதியில் இடம்பெற்ற பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நபரொருவர், பொலிஸாரை கண்டதும் இழுவை பெட்டியை கழற்றி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த வழக்கு விசாரணையானது (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த நபர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டத்தை அடுத்து, அவரை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், மணலை பறிமுதல் செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts